புற்றுநோயாளிகளை மருந்து மாபியாவிற்கு பலிக்கடா ஆக்கும் சில மருத்துவர்கள் : வெளியான குற்றச்சாட்டு

Cancer Ministry of Health Sri Lanka Doctors
By Sumithiran Feb 23, 2025 12:08 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

சிறப்பு மருத்துவர்கள் சங்கத்தால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை சில மருத்துவர்கள் பரிந்துரைப்பதால், புற்று நோயாளிகள் பெரும்பாலும் தனியார் துறையிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது என்று மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

புற்று நோயாளிகளுக்கு தேவையற்றவை என சிறப்பு மருத்துவர்கள் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பட்டியல் இருப்பதாகவும், அந்த மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவால் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தனியார் துறையிடமிருந்து வாங்க வேண்டியிருக்கும்

பட்டியலில் இல்லாத மருந்தை ஒரு மருத்துவர் பரிந்துரைக்கும்போது, ​​நோயாளிகள் அதை தனியார் துறையிடமிருந்து வாங்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

புற்றுநோயாளிகளை மருந்து மாபியாவிற்கு பலிக்கடா ஆக்கும் சில மருத்துவர்கள் : வெளியான குற்றச்சாட்டு | Doctors Making Cancer Patients Victims Drug Mafia

புற்றுநோய் நோயாளிகளுக்குத் தேவையான சில மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை என்ற புகார்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக விஜேசூரிய இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

வெளிநாடொன்றில் கரை ஒதுங்கிய அரியவகை மீன் : உலக பேரழிவுக்கான அறிகுறி...! : அச்சத்தில் மக்கள்

வெளிநாடொன்றில் கரை ஒதுங்கிய அரியவகை மீன் : உலக பேரழிவுக்கான அறிகுறி...! : அச்சத்தில் மக்கள்

சுகாதார அமைச்சகம் மொத்தம் 865 வகையான மருந்துகளைப் பதிவு செய்திருந்தாலும், அவற்றில் 285 மட்டுமே உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், மீதமுள்ள 580 மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

சில வகையான மருந்துகள் அவசியமில்லை 

"புற்றுநோய் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் பல வகையான மருந்துகள் உண்மையில் உள்ளன." அவைகளில் இரண்டு அல்லது மூன்று இல்லை மற்ற எல்லா மருந்துகளும் இங்கே உள்ளன. சில மருத்துவர்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கு மேலதிகமாக வேறு மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், புற்றுநோய் நோயாளிகளுக்கு சில வகையான மருந்துகள் அவசியமில்லை என்று சிறப்பு மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. அவை எங்கள் பட்டியலில் இல்லை.

புற்றுநோயாளிகளை மருந்து மாபியாவிற்கு பலிக்கடா ஆக்கும் சில மருத்துவர்கள் : வெளியான குற்றச்சாட்டு | Doctors Making Cancer Patients Victims Drug Mafia

ஆனால் சில மருத்துவர்கள் அவற்றை எழுதுகிறார்கள். எழுதி முடித்ததும், நோயாளிகள் அவற்றை வெளியே எடுத்துச் செல்ல வேண்டும். இதுபோன்ற சமயங்களில் தான் பெரும்பாலான பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது.

நாங்கள் வழக்கமாக மருந்து பற்றாக்குறை ஏற்பட்டால் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மருந்துகளை வழங்குவதற்காக வேலை செய்கிறோம்.

இதேபோல், மருத்துவமனை பணிப்பாளர்கள் அத்தகைய மருந்துகளை உள்ளூரில் வாங்கி வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால், மருத்துவமனை பணிப்பாளர் அவற்றை உள்ளூரில் வாங்கலாம்.

13 ஆண்டுகளில் இரும்பு அசுரனால் கொல்லப்பட்ட 149 யானைகள்

13 ஆண்டுகளில் இரும்பு அசுரனால் கொல்லப்பட்ட 149 யானைகள்

மாற்று மருந்து உள்ளது

சில மருந்துகள் இனி கிடைக்கவில்லை என்றாலும், அவற்றுக்கு மாற்றாக உள்ளன. உதாரணமாக, ஒரு வகை வலி நிவாரணி கையிருப்பில் இல்லாவிட்டாலும், அதற்கு மற்றொரு மாற்று மருந்து உள்ளது.

புற்றுநோயாளிகளை மருந்து மாபியாவிற்கு பலிக்கடா ஆக்கும் சில மருத்துவர்கள் : வெளியான குற்றச்சாட்டு | Doctors Making Cancer Patients Victims Drug Mafia

இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு அடிக்கடி பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கான காரணம் பதிவு இல்லாததுதான். கொண்டு வரப்படும் மருந்துகளின் நிலை குறித்த அறிக்கைகள் இல்லாமை. சர்வதேச அளவில் சில மருந்துகள் கிடைக்காததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.  

குட்டித் தேர்தல் எப்போது..! கசிந்தது தகவல்

குட்டித் தேர்தல் எப்போது..! கசிந்தது தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023