யாழில் ஒருவருக்கு மலேரியா தொற்று, எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்கள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞனே இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ஆவர் .
குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டிலிருந்து திரும்பி வந்த நிலையில் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனால் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு மலேரியா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
