மட்டு நீதிமன்றத்தில் ஆவண திருட்டு : விதிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
மட்டக்களப்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் ஆவணங்களை திருடிய இருவருக்கு எதிராக விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஊழியர் மற்றும் மணல் வியாபாரி இருவருக்கு எதிராகவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த நான்கு ஆவணக் கோப்புக்கள் கொண்ட ஆவணங்கள் திருட்டுப் போயுள்ளது.
பதிவு ஆவணங்கள்
இதையடுத்து, இது தொடர்பில் காவல்துறையில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திருட்டுப் போன வாகன வழக்கு தொடர்பான ஆவணக் கோப்பு அடங்கிய ஆவணங்களை அங்கு கடமையாற்றி வந்த ஊழியர் ஒருவர் மணல் வியாபாரியுடன் இணைந்து அந்த வழக்கு ஆவணக் கோப்புக்களை அங்கிருந்து திருடியுள்ளார்.
இதன்பின், அந்த ஆவணக் கோப்பில் இருந்த ஆவணங்களை எடுத்து விட்டு அதில் தனது பெயருக்கு மாற்றிய வாகன பதிவு ஆவணங்களை வைத்து மீண்டும் பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மணல் வியாபாரி
இதனையடுத்து, குறித்த ஊழியரும் மணல் வியாபாரியும் கடந்த மாச் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பின்பு, அவர்களை கடந்த ஏழாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்பின்பு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்காக கடந்த ஏழாம் திகதி நீதிமன்றில் இருவரையும் முன்னிலைப்படுத்திய நிலையில், வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான் இருவரையும் மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this..!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
