கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!
ராஜபக்ச அதிகாரத்துவத்தின் ஒரு முகமான கோட்டாபய கைது செய்யப்படும் அறிகுறிகள் பையில் இருந்து வெளிவரும் பூனைக்குட்டியாக தெரிவதால் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி தொடர்பாக தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய ராஜபக்ச இன்று (16) சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றில் அவசர ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் சுகிஸ்வர பண்டார அண்மைய நாட்களில் குத்திமுறிந்த நிலையில் கோட்டாவுக்கு இப்போது தான் தூக்கப்படுவேன் என்ற உதறல் எடுத்துள்ளதால் இந்த ரிட் மனு குதித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதும் சரி உயிர்த்த ஞாயிறு தாககுதல்களுக்கு பின்னர் அரச தலைவராக ஆட்சி செய்தபோதும் சரி போதும் இதே பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விசாரணையின்றி தடுத்து வைக்கபட்டதன் கர்மா இப்போது தன்னையும் இவ்வறான ஒரு கைது வடிவில் அச்சுறுத்துவதால் அவருக்கு உதறல் ஏற்பட்ட நிலையில் இந்த தரவுகளுடன் வருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |