பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம்: யாழில் வெடித்த போராட்டம்
பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என்று தெரிவித்து குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக இடமாற்றம் செய்திருந்தது.
அதிபரை மாற்றவேண்டாமென போராட்டம்
இந்நிலையில் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு கோரி இன்றைய தினம் 7. 45 மணியளவில் பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது "மாற்றாதே மாற்றாதே அதிபரை மாற்றாதே, அதிபரின் தற்காலிக இடமாற்றத்திற்கு காரணம் என்ன அதிகாரிகளே பதில் சொல்" என கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இலங்கையில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இரகசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி மையங்கள் : வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது
கல்வி பணிப்பாளருக்கு மகஜர்
போராட்டம் முடிவில் கல்வி பணிப்பாளருக்கு வழங்குவதற்கு மகஜர் ஒன்றும் தற்போதுள்ள பதில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இதில் சுமார் 75க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கிராம மக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை குறித்த அதிபர் மீது அதிருப்தியுற்ற பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அவரை மாற்றம் வேண்டும் என்று கடந்த காலத்தில் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் அதே தவறை செய்யவேண்டாம் :ஈரான் உயர் தளபதியிடமிருந்து அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



