2–3 வாரங்களில் ஈரான் போர் முடிப்பேன் - டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு
இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்காவால் நிறுத்த முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த போதே டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானை கற்காலத்திற்குத் தள்ளி விட்டு அவர்களால் அணு ஆயுதத்தைக் தயாரிக்க பிடிக்க முடியாது என்று நாங்கள் உணரும்போது போரிலிருந்து நாங்கள் வெளியேறிவிடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒப்பந்தம் அவசியமில்லை
அதுமட்டுமின்றி எரிசக்தி விநியோகத்தைச் சீர்குலைத்து, உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவர ஓர் ஒப்பந்தம் அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நேரடி மற்றும் மறைமுகச் செய்திகள் பரிமாறப்பட்ட போதிலும் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்ததமைக்கு பதில் வழங்கும் விதமாக மேற்படி ட்ரம்பின் கருத்தக்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் தலையைத் துண்டிக்கும்
மேலும் இது குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், "ஈரானின் தலையைத் துண்டிக்கும் செயலில் ஈடுபட மறுத்த ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளைக் குறிவைத்து, அமெரிக்க எரிபொருளை வாங்காதிருக்க வேண்டும்.

அல்லது வேகமாகத் தீவிரமடைந்து வரும் போரில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
நீங்கள் உங்களுக்காகப் போராடக் கற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு உதவ இல்லாதது போலவே, அமெரிக்கா இனி உங்களுக்கு உதவியாக இருக்காது.
ஈரான், அடிப்படையில், முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. கடினமான பகுதி முடிந்துவிட்டது. நீங்களே சென்று உங்கள் எண்ணெயைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று அவர் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்