நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை - அர்ச்சுனா எம்.பி. விளக்கம்
பொதுவாக மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளையே தாம் நாடாளுமன்றில் முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நேற்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இஸ்லாமிய மதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கவில்லை என அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.
எந்த மதத்தையும் நிந்திக்கும்
அத்துடன் சிறுபிள்ளைகளையும் பெண்களையும் மாத்திரமே தாம் கருத்திற் கொண்டு பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தான் எந்த மதத்தையும் நிந்திக்கும் விதத்தில் செயல்படவில்லை என்றும் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனாவின் கருத்துக்கு எதிர்ப்பு
இதேவேளை, நாடாளுமன்றில் தனக்கு இருக்கின்ற உரிமையை பயன்படுத்தி ஒரு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் ஒரு மார்க்கத்திற்கு எதிராகவும் பேசுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
அதைவிடுத்து, நாடாளுமன்றில் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசிவிட்டு, அது சார்பில் அவர்களிடத்திலேயே விளக்கங்களை கேட்டு, மிகவும் மோசமாகவும் கேவலமாகவும் அறிக்கைகளை வெளியிடுவது தமிழ் மக்கள் இடத்திலும் முஸ்லிம் மக்கள் இடத்திலும் பாரிய பிளவை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்