வாகனதாரிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள சலுகை
srilanka
ration
driving licence
By Sumithiran
கொரோனா தொற்று பரவல் காரணமாக காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக மூன்று மாதம் மற்றும் ஆறு மாத நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி மார்ச் 21ஆம் திகதி முடிவடையும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக மூன்று மாத கால நிவாரண காலம் வழங்கப்படும்.
அதேவேளை ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து செப்ரெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான ஆறு மாத கால நிவாரண காலம் வழங்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்