தெற்கில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவு போதைப்பொருள் மீட்பு!
களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட கட்டுக்குறுந்த கடற்கரையில் இருந்து இன்று (05.11.2025) காலை ஹஷிஷ் போதைப்பொருள் தொகையொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் தொகையில் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் காணப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
கடற்கரையில் ஒதுங்கியிருந்த இந்தப் பொதியை அருகில் உள்ள சுற்றுலா விடுதி ஊழியர்கள் முதலில் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்கள் இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தீவிர விசாரணை
அதனைத்தொடர்ந்து, கட்டுக்குறுந்த காவல்துறை விசேட அதிரடிப் படை பயிற்சி முகாம் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, குறித்த பொதியை மீட்டு மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் களுத்துறை கட்டுக்குறுந்த காவல்துறை விசேட அதிரடிப் படையினரும், களுத்துறை தெற்கு காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |