பாடசாலை மாணவர்களை ஆக்கிரமித்துள்ள போதைப்பொருள் : அநுர அதிரடி அறிவிப்பு
நாட்டில் போதைப்பொருள் பரவலானது யாதுமறியாத இளம் குழந்தைகளின் பாடசாலைப் பைகளைக் கூட ஆக்கிரமித்து வருகிறதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
நேற்று (07) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் அச்சுறுத்தல் நமது நாடு எதிர்கொள்ளும் மிகவும் கடுமையானதொரு தொற்று என்பதையும், உண்மையான நிலைமையானது நாம் நினைப்பதை விட மிகவும் பயங்கரமானது என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பயங்கரமான பேரழிவு
இந்த போதைப்பொருள் பரவலானது யாதுமறியாத இளம் குழந்தைகளின் பாடசாலைப் பைகளைக் கூட ஆக்கிரமித்து வருகிறது. இது அநேகமாக ஒவ்வொரு வீட்டின் கதவுகளையும் தட்டுகிறது.இளம் தலைமுறையினர் கடுமையான ஒரு துயரத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

மேலும் முழு நாடும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தப் பேரழிவிற்கு இரையாகவும் பாதிப்பாகவும் மாறி வருகிறது. இந்த நிலைமை சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் ஒரு ஆபத்தான செய்தியை தருகின்றது.
சுத்தமான மற்றும் அழகான நாட்டை உருவாக்க இந்த பயங்கரமான பேரழிவை தீர்க்கமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
அரச சேவையில் ஊழல்
போதைப்பொருள், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் அரச சேவையில் ஊழல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சிலர், அரசியல் ஆர்வத்தால் பிணைக்கப்பட்டுள்ள சங்கிலிகளை ஒவ்வொன்றாக உடைத்து வருகின்றனர்.

இந்த கடினமான மற்றும் அத்தியாவசியமான பணியானது ஒரு கட்சி அல்லது ஒரு குழுவால் மட்டுமே செய்யப்படக்கூடிய ஒரு தனிமையான போர் அல்ல. இந்த உன்னதமான தேசிய பணிக்கு முழு நாட்டையும் அழைக்கிறோம்.
அதன்படி, இன்று, முழு சமூக கட்டமைப்பிலிருந்தும் நச்சு போதைப்பொருட்களை அகற்றுவதற்கான 'ஒரு தேசம் ஒன்றுபட்ட தேசிய நடவடிக்கை ‘ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எந்த சவாலின் கீழும் நிறுத்தப்படாது, பின்வாங்காது, இறுதிவரை போராடும் ஒரு திட்டமாகும்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |