பாடசாலையிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் பொதிகள் - பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி
அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் அபாய அறிவிப்பை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த செயற்பாட்டில் மாணவர்களும் ஈடுபட்ட சம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.
சிற்றுண்டிச்சாலையில் போதைப்பொருள் பொதிகள்
இந்த நிலையில் பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் இருந்தே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த சிற்றுண்டிச்சாலையிலிருந்து 07 பைக்கட் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 38 போதைவில்லைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெண் - காவல்துறையினரால் கைது
இந்த சம்பவம் தொடர்பாக சிற்றூண்டிசாலையை நடத்தி வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.