அதிகாலையில் மாணவர்களிடம் பணிந்தார் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர்! காணொளி இணைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குனராஜா அதிகாலையில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உலக நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் இச்செயலுக்கு எதிராக வலுவாக குரல் எழுப்பியிருந்தனர்.
அதுமாத்திரமன்றி, மாணவர்கள் உணர்வு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். மாணவர்களின் கோரிக்கையை துணைவேந்தர் ஏற்றதுடன், இன்று அதிகாலை 3.30 இற்கு மாணவர்களை நேரில் சந்தித்து வாக்குறுதியளித்திருந்தார்.
இதற்கிடையில், நினைவுத் தூபி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுவதற்கு அனுமதி கொடுத்ததுடன் அதே இடத்தில் அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


