சிறையில் பிள்ளையானின் அறைக்கு அடுத்த அறையில் நடந்த சம்பவம்!
இலங்கை வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை.
இந்தத் தாக்குதல்களுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே ஆகியோருக்கும் இடையிலான தொடர்பு குறித்து எழுந்துள்ள அதிரடித் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி மௌலவி மற்றும் மில்ஹான் ஆகியோரை, பிள்ளையான் தான் இருந்த சிறை அறைக்கே அழைத்து இரகசியமாகப் பேசியுள்ளதாக ஒரு சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்புகள் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான முந்தைய திட்டமிடல்களுடன் தொடர்புடையவை என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, பிள்ளையானின் கைது, அவருக்கு தற்கொலைதாரி சஹ்ரானின் குழுவினருடன் இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது ஐபிசி தமிழின் உண்மை நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |