பிள்ளையான் விவகாரத்தில் தீவுச்சேனையிலுள்ள மர்மம் இதுதான்: அரியநேந்திரன்
கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான சனல் 4 இன் ஆவண அறிக்கை மாறியிருந்தது இந்த கொலைக்களம் தொடர்பில் குற்றச்சாட்டவர்களான பிள்ளையான் என்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தாக்குதல் நமவடிக்கையின் பிரதான சூத்திரதாரியான சகரான் போன்றவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்ற ரீதியில் ஒரு பார்வையினை ஒரு சிலர் முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த ஆவணம் வெளியிடப்பட்ட பின்னரான மட்டக்களப்பு மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது தாம் அதிக விருப்புவாக்குகளை வழங்கி நாடாளுமன்ற கதிரையில் அமர்த்தி வைத்து அழகுபார்த்த தங்களது பிரதிநிதி ஒரு சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய குற்றவாளி என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வார்களா ?
இந்த விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் இதற்கு முன் செய்ததாக கூறப்பட்ட படுகொலைகள் மிலேச்சத்தனமான ஆட்கடத்தல்கள் இவற்றில் தளமாக இருந்துவந்ததாக கூறப்பட்ட தீவுச்சேனை என்ற இடத்தின் பின்னனியில் உள்ள மர்மம் என்ன ?
படுகொலையுண்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவகாரத்தில் தமிழசுக்கட்சி அசண்டையீனமாக இருந்து வந்திருக்கிறதா?
இப்படி இன்னும் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகளை அவிழ்க்கவேண்டிய விடயங்களை பற்றி ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கூறிய விடயங்கள் பின்வருமாறு...