பூஜித் - ஹேமசிறி மரணதண்டனை trailer சரி... கோட்டா மெயின் பிக்சர் எப்போது...!
சிறிலங்கா தலைநகரில் நடத்தப்பட்ட ஒரு ட்ரையல்-அட்-பார் (Trial-at-Bar) நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில், சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியின் அதிர்வுகள், ராஜபக்ச அல்லக்கை முகங்களின் வாய்களை அசைபோட வைக்கின்றன.
2019 ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றத்தில் நேற்று இந்தத் தீர்ப்பைப் பெற்ற இருவரும், இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவைத் தமது விதியை நொந்தபடி உண்டிருக்கக்கூடும்.
இனி இந்த இருவருக்கும் ரணில் - சுரேஷ் சாலே பாணியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய சடுதி நோய் பீடிப்புகள் வராதிருக்கக் கடவதாக அதுபோல மேன்முறையீட்டில் இவர்களுக்குப் பிணை கிட்டாது என்ற நம்பிக்கையும் அதிகம் இல்லாதிருக்கக் கடவதாக.
ஆனால், முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் சார்ந்த இந்தத் தீர்ப்புகளுக்குப் பின்னர் வரக்கூடிய அடுத்த கட்டத் தீர்ப்புகள், அதிலும் இந்தத் தாக்குதலைத் தந்திரமாக அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி 2019 அரசதலைவர் தேர்தல் வெற்றிக்கான சதித்திட்டத்தைச் செய்தவர்கள் குறித்த தீர்ப்புகள் இன்னும் பரபரப்பாக இருக்கும் என ஊகிக்கப்படும் நிலையில், இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |