கிழக்கு மாகாண மாவட்டங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு! ஆளுநர் உத்தரவு
corona
sri lanka
people
By Shalini
கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாகாணத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மாலை 6 மணிக்குப் பிறகு மூடுமாறு ஆளுநர் கோரியுள்ளார்.
இதற்கிடையில், அவசரமற்ற நிலை தவிர, மாலை 6 மணிக்குப் பிறகு மக்கள் நகரங்களுக்குள் நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட எல்லைகளுக்கு இடையில் வீதித் தடைகளைப் பயன்படுத்தி மக்கள் தேவையற்ற நடமாட்டத்தை உடனடியாக அமுல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கும் ஆளுநர் உத்தரவிட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்