டிக்கோயாவில் நள்ளிரவில் கொடூரம்! வர்த்தக நிலையமொன்றில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட தம்பதி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Hatton
By Shalini Balachandran
டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இருவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (21-05-2026) இடம்பெற்றுள்ளது.
84 வயது மதிக்கத்தக்க தம்பதியே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கூரிய ஆயுதம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இருவரும் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கணவன் கட்டிலில் வெட்டுக்காயங்களுடனும் மனைவி மாடிப்படியருகில் வெட்டுக்காயங்களுடனும் காணப்பட்டுள்ளனர்.
ஹட்டன் காவல்துறையினர் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
படுகொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி