கிளிநொச்சியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவருக்கு நேர்ந்த விபரீதம்
Kilinochchi
Accident
Death
Train
By Independent Writer
Courtesy: siva
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தொண்டைமான் நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முட்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் ராணி தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சபாபதி என்ற 82 வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
தொடருந்து பாதையை கடக்க முற்பட்டபோது விபரீதம்
விபத்தில் பலியான நபர் துவிச்சக்கர வண்டியை தூக்கிகொண்டு தொடருந்து பாதையை கடக்க முற்பட்ட போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
இன்று இடம்பெற்ற இடத்தில் பல விபத்துக்களினால் பலர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி