யாழில் முச்சக்கரவண்டியால் வந்த விபரீதம் : பறிபோன உயிர்
யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். நீர்வேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சந்திரராசா (வயது 72) என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி அச்சுவேலியில் இருந்து நல்லூர் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவேளை பின்னால் வந்த முச்சக்கர வண்டி அவரது துவிச்சக்கர வண்டியில் இருந்த ஊன்றுகோல் மீது தட்டியது.
துவிச்சக்கரவண்டியில் பயணித்தபோது நிகழ்ந்த விபரீதம்
இதன்போது குறித்த முதியவர் வீதியில் விழுந்து படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
அதன்பின்னர் நேற்றையதினம்(26) அவருக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டபோது மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று(27) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
