யாழில் விபத்தில் சிக்கிய முதியவருக்கு நேர்ந்த கதி
யாழில் விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலி - கலாசாலை வீதி பகுதியை சேர்ந்த வல்லிபுரம் மகாலிங்கம் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆதார வைத்தியசாலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் கடந்த ஐந்தாம் திகதி மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சி சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்தநிலையில் படுகாயமடைந்த குறித்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மரண விசாரணை
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
