போலந்தை அடுத்து ருமேனியாவில் ரஷ்ய டிரோன்: ஐரோப்பாவில் பதற்றம்
போலந்தை (Poland) தொடர்ந்து ருமேனியாவிலும் (Romania) ரஷ்ய டிரோன் ஊடுருவி சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் மத்தியில் இது கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், போலந்து வான்வெளியில் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்தன.
போலந்து வான்வெளி
இதனை அந்நாட்டு இராணுவம் சுட்டு வீழ்த்தியதுடன் போலந்து வான்வெளியை பாதுகாப்பதற்கு உதவும் வகையில் ரபேல் விமானங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்தது.
இந்தநிலையில் ருமேனியா வான்வெளியிலும் ரஷ்ய டிரோன் அத்துமீறி நுழைந்துள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.
போர் விமானங்கள்
இதனை போர் விமானங்கள் மூலம் கண்காணித்ததாகவும், உக்ரைனின் எல்லை அருகே இந்த டிரோன் காணப்பட்டதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
சிலியா வெச்சே பகுதியில் முதலில் காணப்பட்ட இந்த டிரோன் பிறகு ரேடாரில் இருந்து மறைந்து விட்டதாகவும், அதேநேரத்தில் மக்கள் நிறைந்த பகுதிகளில் இந்த டிரோன் காணப்பட்டதாகவும் அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்த டிரோன் தவறுதலாக ருமேனியாவிற்குள் நுழைந்து இருக்காது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
