முல்லைத்தீவிலிருந்து யாழுக்கு உறவினரை பார்க்க வந்த முதியவருக்கு நேர்ந்த துயரம்
யாழில் வீதியை கடக்க முயற்சித்த முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்தார். முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த இளையதம்பி நந்தகுமார் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
அச்சுவேலியில் உள்ள உறவினரை சந்திக்க வந்துள்ளார். இந்நிலையில் இவர் 27ஆம் திகதி இரவு அச்சுவேலி பகுதியில் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு வீதியை கடப்பதற்கு முயற்சித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம்
இதன்போது வீதியால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர்மீது மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகள் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
