போரை முடிவிற்கு கொண்டுவந்த அதிபரை யாரும் பழி சொல்ல அனுமதிக்க முடியாது : சனத் நிஷாந்த
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் தீர்கப்படாத 2.6 மில்லியன் மின்சார கட்டணம் நேற்றைய தினம் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் தீர்க்கப்பட்டது.
போரை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அரசியலிலும் வர்த்தகத்திலும் அவருக்கு ஆதரவாக இருந்த நண்பர் என்பதாலும் தான் இந்த பிரச்சனையை தீர்த்து வைத்ததாக ராஜாங்க அமைச்சர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
நிலுவைத் தொகை
“இன்று நான் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சார்பாக மின்சார சபைக்கு மொத்த மின்சார கட்டணமான 2,682,246.57 ரூபாவை செலுத்தினேன்.

போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் பாரிய அபிவிருத்திகளில் ஈடுபட்ட தலைவர் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச அவர் யாரிடமும் பழி கேட்க அனுமதிக்க முடியாது.
எனவே, நிலுவைத் தொகை இருந்தால், அதைத் தீர்ப்பேன்.” என்றார்.