அவசர மின்சாரக் கொள்வனவு வெறும்கண்துடைப்பே!! ஹர்ஷ டி சில்வா
மின்சாரத்தை அவசரமாகக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை வெறும்கண்துடைப்பே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் மத்தயில் கருத்து வெளியிட்ட அவர், இவை அனைத்தும் நாடகமே எனக் கூறினார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
''நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாடு குழறுபடிகளைக் காண்பித்து, அவசரமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை மின்சாரசபை முயல்கிறது.
84.5 ரூபாய்க்கு ஒரு அலகு மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை மின்சாரசபை தயாராகி வருவதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மின்சாரத்தை அவசரமாகக் கொள்வனவு செய்யும் பட்சத்தில் அதில் ஊழல், மோசடிகள் இடம்பெறலாம்.
இவ்வாறு அவசரமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டுமென அழுத்தம் கொடுப்பவர் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
