பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்!
எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பாரபட்சமற்ற விசாரணைகள்
இந்த ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் எவ்விதத் தலையீடுகளுமின்றி, பாரபட்சமற்ற முறையிலும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரச நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாக இது அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |