செய்வதறியாது தத்தளிக்கும் அநுர! முக்கிய அமைச்சருக்கு நேர்ந்துள்ள அவலம்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Bribery Commission Sri Lanka Kumara Jayakody
By Dhilak Aug 18, 2025 03:19 PM GMT
Report

அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட தொடங்கியுள்ளன.

2015 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் நிதி முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை எதிர்த்து வழக்கு தொடரத் தயாராகி வருகிறது.

அத்தோடு, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நீதிபதியொருவரை குறித்தும் கருத்து தெரிவித்ததற்காக ஜயகொடியை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் அமைப்புகள் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளன. 

உண்மைகளை வெளிப்படுத்திய சோமரத்ன மீது சிறைக்குள் கொலைமுயற்சி: சர்ச்சைக்குள் சந்திரிக்கா!

உண்மைகளை வெளிப்படுத்திய சோமரத்ன மீது சிறைக்குள் கொலைமுயற்சி: சர்ச்சைக்குள் சந்திரிக்கா!


தற்காலிகமாக பதவி விலகல்

இந்த வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஜயகொடி கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

செய்வதறியாது தத்தளிக்கும் அநுர! முக்கிய அமைச்சருக்கு நேர்ந்துள்ள அவலம் | Energy Minister Waiting To Resign

ஜயகொடி, ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு மிகவும் நெருக்கமான நண்பராக கருதப்படுகிறார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி காலத்தில் அநுர குமார திசாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது ஜயகொடியை உரக் கூட்டுத்தாபனத்திற்கு அறிமுகப்படுத்தினார். 

அதன்பின் இருவரும் வலுவான நட்பை பேணி வந்துள்ளனர். ஜயகொடி, திசாநாயக்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும் முக்கிய பங்கு வகித்தார்.

ஆனால் தற்போது, 2015ஆம் ஆண்டில் உரக் கூட்டுத்தாபன தலைவராக இருந்தபோது ரூ. 8 மில்லியன் நிதி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சில நெருங்கிய ஆலோசகர்கள் ஜனாதிபதியிடம் ஜயகொடி தற்காலிகமாக பதவி விலகுவது சிறந்தது என பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தின் விளைவு: சுமந்திரனுக்கு அர்ச்சுனா சாட்டையடி!

இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தின் விளைவு: சுமந்திரனுக்கு அர்ச்சுனா சாட்டையடி!


ஜனாதிபதியின் காத்திருப்பு 

இந்நிலையில், ஜனாதிபதி திசாநாயக்க ஜயகொடியை உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளவில்லை என்றாலும், நீதிமன்ற தீர்ப்பின் முன்னேற்றத்தை காத்திருந்து நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செய்வதறியாது தத்தளிக்கும் அநுர! முக்கிய அமைச்சருக்கு நேர்ந்துள்ள அவலம் | Energy Minister Waiting To Resign

மேலும், வாரந்தோறும் நடைபெறும் மூத்த அமைச்சர்களுடனான கலந்துரையாடல்களில், ஜயகொடி தன்னிச்சையாக பதவி விலகினால் அரசுக்கு நல்லது என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

எனினும், பதவி விலகும் திட்டம் எதுவும் இல்லையென ஜயகொடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இந்த விவகாரம் நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சியினராலும் வலுவாக முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமந்திரனால் வர்த்தக சங்கத்திற்குள் வெடித்த சண்டை

சுமந்திரனால் வர்த்தக சங்கத்திற்குள் வெடித்த சண்டை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021