கிழக்கு மாகாணத்தில் கரிசனையை ஏற்படுத்திய தமிழர்
கிழக்கு மாகாண ஆளுநராக முதன் முதலாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர்களாக மொஹான் விக்ரமரத்ன, ஒஸ்ரின் பெர்ணாண்டோ, ரோஹித்த போகல்லாகம, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஷான் விஜயலால் டி சில்வா, அனுராதா யகம்பத் ஆகியோரே பதவியாற்றிய நிலையில் தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மண்ணுக்கு தமிழ் ஆளுநர்

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் தமிழ் ஆளுநர்கள் பதவி வகித்தபோதும் கிழக்கு மண்ணுக்கு முதன்முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமையும் மகிழ்ச்சியளிப்பதாக சிறிலங்கா அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கு இருவரும் இணைந்து செயற்பட இணக்கம் கண்டுள்ளனர்.
அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள கட்சி பிரதிநிதிகள் சகிதம் விரைவில் ஆளுநருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.