ஆட்சி அமைக்கும் கட்சிக்கு...! எடப்பாடியிடம் இருந்து பறந்த செய்தி
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அந்தப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வெற்றிகரமாக நடந்து முடிந்த 17 ஆவது தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி
தமிழகத்தில் ஆட்சி அமைக்கவிருக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நீடிக்கும் நிலையில் பழனிசாமியின் இந்தப் பதிவு ஒரு சிக்னல் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இருப்பினும் தவெகவுக்குப் பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை.
பழனிசாமி வாழ்த்து
இந்தநிலையில் தவெகவிற்கு ஆதரவளிப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது முடிவை இன்று மாலை அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தவெகவுக்குப் பெரும்பான்மைக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உறுதி செய்யப்பட்ட பிறகே ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.@AIADMKOfficial
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 9, 2026
இதனிடையே, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்ததாகத் தகவல்கள் பரவி வந்தன.
இப்பின்னணியில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |