கொழும்பு துறைமுகத்தில் குவிந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள்
colombo
port city
essentials-stored
By Jaso
டொலர் நெருக்கடிக்கு இதுவரை உரிய தீர்வு காணப்படாத நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்