லொட்டரியில் விழுந்த மில்லியன் கணக்கான பணம் - உரிமையாளர்கள் இன்றி தவம் கிடப்பு
பிரித்தானியாவில் EuroMillions லொட்டரியில் வெற்றிபெற்றும் உரிமை கோரப்படாத பெருந்தொகை பணம் தொடர்பான விபரங்கள் வெளிவந்துள்ளன.
இவ்வாறு உரிமை கோரப்படாமல் போன மூன்று பெரிய பரிசுகள் லண்டனில் வாங்கிய டிக்கெட்டுகள் எனக் கூறப்படுகிறது.
இதில் ஈலிங் நகரத்தில் வாங்கப்பட்ட ஒரு டிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை இதுவரை எவரும் கைப்பற்றவில்லை என்றே கூறப்படுகிறது. அதன் மொத்த மதிப்பு 66,729 பவுண்டுகள் எனக் கூறுகின்றனர்.
உரிமை கோருவதற்கான வாய்ப்பு
2022 ஓகஸ்ட் 19ஆம் திகதி நடந்த குலுக்கலில் லண்டன் நபருக்கு தொடர்புடைய தொகை பரிசாக கிடைத்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரையில் அந்த நபருக்கு உரிமை கோருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாதம் 10,000 பவுண்டுகள் ஓராண்டுக்கு என பரிசாக கிடைத்துள்ளதும் இதுவரை எவரும் உரிமை கோரவில்லை.
இந்த நபருக்கு ஜூன் 3ஆம் திகதி வரையில் உரிமை கோர அவகாசம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Tewkesbury பகுதியில் வாங்கப்பட்ட ஒரு டிக்கெட்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது.
National லொட்டரி
இதேபோன்று Hertsmere பகுதியில் வாங்கப்பட்ட டிக்கெட்டுக்கும் 1 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது. இந்த இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்றே கூறப்படுகிறது.
பரிசை வென்றவர்கள் காலதாமதமின்றி துரிதமாக செயல்பட்டு, 180 நாட்களுக்குள் முறையான ஆதாரங்களுடன் உரிமை கோர வேண்டும்.
தவறினால் அந்த தொகையானது பிரித்தானியாவில் National லொட்டரி முன்னெடுக்கும் திட்டங்களுக்காக செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.