முன்னாள் எம்.பி சந்தன கத்ரிஆரச்சி அதிரடி கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி (Chandana Kathriarachchi)ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிலியந்தலாவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிகள் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்போது ரீ - 56 ரக இரண்டு மெகசீன்கள், அதற்கான 221 தோட்டாக்கள் மற்றும் கைகுண்டு ஒன்றும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிடியாணை ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, குறித்த ஆயுதங்களுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தன கத்ரியாராச்சி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.