வெளியானது உயர்தர பெறுபேறு
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி க.பொ.த. உயர்தர பரீட்சை நடைபெற்றது. இதில் 62,824 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சை முடிவுகளை https://www.doenets.lk/examresults இணைய முகவரியூடாக பார்வையிட முடியும்.
இணையவழியில் வெளியான பரீட்சை முடிவுகளின்படி யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் ‘Physical science’ stream இல் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
கணித பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஆறுமுகம் சுபவர்சனா.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 க.பொ.த உ/தர வர்த்தக பிரிவில் கிளி/ கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரி மாணவி மகேந்திரன் டர்சிகா மாவட்ட நிலை 01 இடத்தைப் பிடித்துள்ளார்.