ஷிரான் பாசிக்கின் வங்கிக் கணக்குகள்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
தற்போது 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாசிக்குடன் தொடர்புடைய அனைத்து வங்கிக் கணக்குகளையும் விரிவாக ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றில் விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து அவரது நிதிக் கணக்குகளை மீளாய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அவரது செல்வம் மற்றும் சொத்துக்கள் குறித்து, சட்டவிரோத சொத்துகள் விசாரணை பிரிவின் மேற்பார்வையில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
விசாரணைகள்
இந்நிலையில், விசாரணையின் போது கிடைத்த தகவலின் மூலம் கொழும்பு மரைன் டிரைவ் பகுதியில் உள்ள பாசிக்கிற்கு சொந்தமானதாக கூறப்படும் ஐந்து ஹோட்டல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று டுபாயில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் ஷிரான் பாசிக், அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, அவரது குற்றச் செயல்கள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துக்கள் குறித்து பல விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |