ஈரானின் பொருளாதார முதுகெலும்பான சவுத் பார்ஸ் ஆலை மீது தாக்குதல்: அடுத்தடுத்துப் பலத்த வெடிப்புச் சத்தங்கள்
ஈரானின் அசாளுயே (Asaluyeh) பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சவுத் பார்ஸ் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்த முக்கியமான பெட்ரோ கெமிக்கல் ஆலை வளாகத்திலிருந்து சில நிமிடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் எரிசக்தி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்த ஆலை இலக்கு வைக்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
இந்த வெடிப்புகளால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் அல்லது சேத விபரங்கள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக, ஈரானின் தேசிய உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து நசுக்கப் போவதாக இஸ்ரேல் விடுத்திருந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அசாளுயே பகுதியில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |