கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து தடம்புரள்வு
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா கடுகதி தொடருந்து தடம்புரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (24) காலை வாதுவை தொடருந்து நிலையத்திற்கு அருகிலேயே குறித்த தொடருந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கரையோர தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தொடருந்து திணைக்களம்
குறித்த தொடருந்து தடம்புரண்ட போதிலும், அலுவலக தொடருந்து சேவைகளை இரத்து செய்யாமல் முன்னெடுக்கத் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, தடம் புரண்ட பகுதி வரை தொடருந்துகளை இயக்கி, அங்கு பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் மற்றுமொரு தொடருந்து மூலம் அவர்களை அழைத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் தொடருந்துகளின் செயற்பாடுகள் குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |