உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடைய 63 பேரையும் பெப்பரவரி மாதம் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காணொளி மூலமாக இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் (A.C.M. Riswan) உத்தரவிட்டார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர்.
அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் பொலநறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.