விடுதலைப்புலிகள் உட்பட மூன்று அமைப்புகள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் எடுத்த நடவடிக்கை
srilanka
facebook
band
By Sumithiran
இலங்கையை தளமாகக் கொண்ட மூன்று அமைப்புகளுக்கான ஆதரவு பதிவுகளை இடுவதற்கு இவ்வருடமும் பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.
இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள்,பொதுபல சேனா மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர்,மற்றும் ‘சிங்ஹலே’ ஆகிய அமைப்புக்களுக்கான ஆதரவான பதிவுகளை இடுவதற்கே அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.
பொதுபல சேனா மற்றும் ‘சிங்ஹலே’ ஆகிய அமைப்புகள் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு மத்தியில் வெறுப்புப் பேச்சுகளை கொண்டுசெல்லுதல் மற்றும் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினை கருத்துக்களை பகிர்தல் என்றதன் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்