இலட்சக்கணக்கான கணக்குகளை முடக்க எத்தனிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம்- வெளியிடப்பட்டுள்ள அதிருப்தி!
உரிமையாளர்கள் இல்லாத முகநூல் பக்கங்களை இடைநிறுத்தவோ அதனை கட்டுப்படுத்தவோ ஸ்ரீலங்கா அரசுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுமார் 20 லட்சம் முகநூல் பக்கங்களுக்கு உரிமையாளர்கள் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எந்த அடிப்படையில் கூறுகிறார் என்பது சிக்கலுக்குரியது என அந்த சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.
முகநூல் கணக்குகளை நீக்கவோ, அவற்றை முறைப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கோ, வேறு அணிகளுக்கோ அதிகாரம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் இப்படியான அறிவிலியான கருத்துக்கள் குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தனது அதிருப்தியை வெளியிடுவதாகவும் குருவிட்டகே குறிப்பிட்டுள்ளார்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 13 மணி நேரம் முன்