விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி போலி பிரசாரம்: சபையில் தெளிவுபடுத்திய விஜேபால
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக அல்லது குண்டு தயாரிக்கும் இடம் நடத்தப்பட்டு வருவதாக சமூகத்தில் எழும் விவாதத்தில் எந்த வித உண்மையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(20.08.2026) உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
2 அடையாள அட்டைகள்
''இந்த விடயம் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான எந்தவொரு பயிற்சி முகாமும் அங்கு நிறுவப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சமூகத்தை தவறாக வழிநடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
அடையாள அட்டையின் படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவரின் பெயர் ரம்புக்வல அதிகராம்கே சங்கீத் ஜயசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணையில் தொழில் ரீதியான 2 அடையாள அட்டைகளை கொண்டிருந்தார். ஒன்றில் வைத்தியர் எனவும், மற்றையதில் மனித உரிமை அமைப்பில் பணிப்பாளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த வித உண்மையும் இல்லை
இதில் எந்த வித உண்மை தன்மையும் இல்லை. இவர் சமூகத்தில் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர். இவருக்கு 7 முகவரிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலி காணி மோசடி குறித்த குற்றச்சாட்டும் வெலிக்கடை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர் தற்போது கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் எந்த வித தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுக்கு நாட்டில் அனுமதி அளிக்கப்படாது." என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4