யாழில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் (Jaffna) - அராலி பகுதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 69 வயதான அம்பலவாணர் நாகேந்திரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ”உயிரிழந்த குறித்த நபர் நடக்க முடியாத ஒரு நீரிழிவு நோயாளி ஆவார்.
மின்சாரம் துண்டிப்பு
கடந்த 22ஆம் திகதி வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியானது அவரது ஆடையில் பற்றி அவர் தீ காயங்களுக்கு உள்ளாகினார்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
