பெற்ற குழந்தையை துப்பாக்கி முனையில் கடத்திய தந்தை- பின்னர் அரங்கேறிய துயரம்!
ஹொரணை- கந்தன பிரதேசத்தில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தையொன்று தந்தையால் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தந்தையான ஹொரணை நீலகவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூரிய ஆயுதத்தால் தனது மனைவியின் கைகால்களை துண்டு துண்டாக வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தியிருந்தார்.
இச்சம்பவத்தின் பின்னர் அவரது குழந்தை மாமியாரின் பாதுகாப்பில் இருந்ததுடன் நாளை குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட இருந்த நிலையிலேயே சந்தேகநபர், குறித்த வீட்டிற்கு வந்து T-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தனது குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
இதையடுத்து, ஹொரணை − வெல்லம்பிட்டி பகுதியில் குழந்தையை மீட்க சென்ற காவல்துறையினரை நோக்கி சந்நேகநபர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், காவல்துறையினர் நடத்திய பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
