அனைத்து அரசியல்வாதிகள் மீதும் கர்தினாலுக்கு ஏற்பட்ட வெறுப்பு
அனைத்து அரசியல்வாதிகள் மீதும் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அனைத்து அரசியல்வாதிகள் மீதும் தனக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதா தெரிவித்துள்ளார்.
"அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைக்காவது மரியாதை காட்ட வேண்டும். அனைத்து அரசியல்வாதிகள் மீதும் எங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது," என்று நீர்கொழும்பில் நடைபெற்ற ஒரு வழிபாட்டின் போது கர்தினால் ரஞ்சித் கூறினார்.
மற்றவர்களைத் திருடர்கள் என்று அழைத்தவர்கள் திருடர்களாகிவிட்டனர்
"ஒரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட அரசியல் முகாமைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றவர்களைத் திருடர்கள் என்று அழைப்பது வழக்கம். இன்றோ, மற்றவர்களைத் திருடர்கள் என்று அழைத்தவர்களே திருடர்களாகிவிட்டதாகத் தெரிகிறது," என்று அவர்குறிப்பிட்டார்.

"சமீபத்தில், ஒரு முன்னாள் அமைச்சர் நீதித்துறையின் மீது முறையற்ற செல்வாக்கு செலுத்தப்படுவதாகக் குறை கூறுவதைக் கண்டேன். இருப்பினும், அவரது காலத்தில் பிரதம நீதிபதி எவ்வாறு நீக்கப்பட்டார் என்பதை அவர் மறந்துவிட்டார்.
தீய சக்திகளின் ஏவலாளி :தமிழர் ஒற்றுமையை குலைக்கத்துடிக்கும் அர்ச்சுனா : பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் கடும் கண்டனம்
பச்சோந்தியைப் போன்ற அரசியல்வாதி
மற்றொரு அரசியல்வாதி, கத்தோலிக்கப் பள்ளிகளில் பொது ஆசிரியர்களை நியமிப்பது குறித்துக் கூச்சலிடுகிறார். இந்த அரசியல்வாதி, அவ்வப்போது நிறம் மாறும் ஒரு பச்சோந்தியைப் போன்றவர்," என்று அவர் மேலும் கூறினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |