யாழில் சாதாரண பரீட்சை நிலையத்தில் வெடித்த மோதல் - மாணவர்கள் மீது தாக்குதல்

Sri Lanka Police Jaffna Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Grade 05 Scholarship examination
By Thulsi Mar 20, 2025 05:04 AM GMT
Report

யாழில் (Jaffna) கா.பொ. த. சாதாரண தரப் பரீட்சை நிலையமொன்றில் மாணவர்களிடையே முறுகல் நிலை காரணமாக கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  

குறித் சம்பவம் நேற்று (19) காலை 7:30 மணியளவில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைக்கப்பட்டுள்ள கா.பொ. த. சாதாரண தரப் பரீட்சை நிலையமொன்றில் இரு பாடசாலைகளின் பரீட்சை நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி

மாணவர்களிடையே முறுகல் நிலை

குறித்த பரீட்சை நிலையத்தில் நேற்று காலை 7:30 மணியளவில் இரு பாடசாலை மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

யாழில் சாதாரண பரீட்சை நிலையத்தில் வெடித்த மோதல் - மாணவர்கள் மீது தாக்குதல் | Fight Between Students Ol Examination Center

முறுகல் கைகலப்பாக மாறியிருந்த நிலையில் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் முதலாம் பகுதி வினாத்தாள் நேரம் முடிவடைந்த நிலையில் நண்பகல் 11:15 மணியளவில் வெளியில் இருந்து ஒரு தரப்பு பரீட்சை நிலைய வளாகத்தினுள் அத்துமீறி நுளைந்து ஒரு தரப்பு மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.

யாழில் காவல்துறையினர் மீது தாக்குதல்: சந்தேகநபர் தப்பி ஓட்டம்

யாழில் காவல்துறையினர் மீது தாக்குதல்: சந்தேகநபர் தப்பி ஓட்டம்

காவல்துறை பாதுகாப்பு

இதனையடுத்து பரீட்சை நிலைய மேற்பார்வையாளரினால் மருதங்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் சாதாரண பரீட்சை நிலையத்தில் வெடித்த மோதல் - மாணவர்கள் மீது தாக்குதல் | Fight Between Students Ol Examination Center

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து பரீட்சை நிலைய மேற்பார்வையாளரினால், எழுத்து மூலமாக பரீட்சை நிறைவு பெறும் வரையான காலம் வரை காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு கோரி முறைப்பாடொன்றை மருதங்கேணி காவல் நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பரீட்சை நிறைவடையும் வரை நடமாடும் காவல்துறையினர் பாதுகாப்பினை வழங்க முன்வந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

செய்தி - பிரதீபன்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன்...! தற்போதைய நிலை

தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன்...! தற்போதைய நிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்