யாழில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகாயம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
யாழில் (Jaffna) கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23) கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பின்பு, விசேட அதிரடிப் படையினர் இணைந்து குறித்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்