குருந்தூர் மலையில் தமிழர்களின் இறுதிப் பூசை இதுவே - குருந்தூர் மலை விகாராதிபதி அதட்டல் பேச்சு

Sri Lankan Tamils Mullaitivu
By Nithusan Aug 19, 2023 07:32 PM GMT
Report

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற பொங்கல் வழிபாடே தமிழர்களின் இறுதி பூசையாக இருக்க வேண்டும் என குருந்தூர் மலை விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த குருந்தூர் மலையை ஒருபோதும் தமிழர்களுக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் ,

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தீர்மானம் தவறே

குருந்தூர் மலையில் தமிழர்களின் இறுதிப் பூசை இதுவே - குருந்தூர் மலை விகாராதிபதி அதட்டல் பேச்சு | Final Puja Of The Tamils At Kurundur Hill Vigarage

" முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் இதனை நாம் தவறான தீர்மானமாகவே கருதுகிறோம். சம்பிரதாய ரீதியான இந்து மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள்.

வடக்கு மாணத்தில் சிங்கள மக்கள் வாழ்வதை விரும்பாத தரப்பினர் விகாரையின் கட்டுமானப்பணிகளை எதிர்த்தனர். இவ்வாறான இனவாதத்தை தூண்டும் தரப்பினரே இன்று பொங்கல் வழிபாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் நாம் இதற்கு இடையூறு விளைவிக்காதிருந்தோம். எனினும், இங்கு நடைபெறும் இறுதி பூசையாக அல்லது நிகழ்வாக இது இருக்க வேண்டும்.

குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புக்களையும் சவாலுக்குட்படுத்தி நாம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளோம். இந்த பிரச்சனையை மேன்முறையீட்டு நீதிமன்றில் தீர்த்துக் கொள்ள நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.

இந்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

இது இலங்கையின் சொத்து. இதன் உண்மையான உரிமையாளர்கள் பௌத்தர்களே. இவற்றை பாதுகாக்கவும் இதன் பயனை பெற்றுக் கொள்ளவும் அனைவருக்கும் உரிமையுண்டு. எனினும், இது பௌத்தர்களுக்கானது.அந்த உரிமையை எவராலும் பறிக்க முடியாது." என்று மேலும் அவர் தெரிவித்தார்.

மாதந்தோறும் பொங்கல் வழிபாடு

குருந்தூர் மலையில் தமிழர்களின் இறுதிப் பூசை இதுவே - குருந்தூர் மலை விகாராதிபதி அதட்டல் பேச்சு | Final Puja Of The Tamils At Kurundur Hill Vigarage

முல்லைத்தீவுடி குருந்தூர் மலையில் மாதந்தோறும் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளதாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்து மக்களையும் இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021