போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி : சிக்கிய சந்தேகநபர்
போலி அடையாள அட்டை மற்றும் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய யக்கல காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெலும்மஹர பகுதியில் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..!
திறந்த பிடியாணை
அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்தமை தொடர்பில், மாரவில நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை காவல்துறையிரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்