யாழில் சீன சொக்லேட்டால் வந்த வினை
யாழில் (Jaffna) சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட , மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சீன சொக்லேட் வகைகள் அனுமதியற்ற வகையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டு , உரிய சுட்டு துண்டுகள் இன்றி விற்பனைக்கு வைத்திருந்தமையை சோதனையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், அவற்றினை சான்று பொருட்களாக கைப்பற்றிய சுகாதார பரிசோதகர் , கடை உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, குறித்த வழக்கு நேற்றைய தினம்(20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கடை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அவருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்