முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
ஹொரணை – படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
'செனஹஸே கெதெல்ல' முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த (03) மாலை சுமார் 5.10 மணியளவில் அந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி மக்களும், உடனடியாக விரைந்த ஹொரண தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்க முயன்றனர்.
கருகிய உடல்கள்
தீ விபத்தில் அந்த மையம் முற்றிலுமாக அழிந்து போனதுடன், விபத்து நடந்த வேளையில் இந்த முதியோர் இல்லத்தில் 72 பேர் தங்கியிருந்தனர் என்பதுடன், தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 10 பேர் கட்டிடத்திற்குள்ளேயே தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.
இந்த தீ விபத்தில் மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உரிமையாளர் கைது
இந்நிலையில் அந்த இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் தற்போது காவலில் உள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை அங்குருவத்த படகொட பகுதியில் தீப்பிடித்து எரிந்த முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை என்று சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 23 மணி நேரம் முன்