அநுர ஆட்சியில் மகிந்தவுக்கு தூக்கு தண்டனை...! சரத் பொன்சேகா நேரடி பாய்ச்சல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்படாவிட்டால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அநுர உட்பட இந்த அரசாங்கம் எவ்வளவுதான் பெருமையடித்துக் கொண்டாலும் மகிந்த ராஜபக்சவுக்குத் தண்டனை வழங்கப்படாவிட்டால் தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
நாட்டிற்கான கடமை
இந்த நாட்டிற்கான கடமையையும் சேவையையும் நிறைவேற்ற வேண்டும்.
இந்த அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்யும் தனது கடமையை நிறைவேற்றும் நாளில் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

இதுதான் யதார்த்தம் மற்றும் இதுதான் உண்மை.
நாங்கள் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் உண்மையைப் பேச நாங்கள் அஞ்ச மாட்டோம்.
24 மணி நேரத்திற்குள் மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யலாம்.
மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை, அவர் தூக்கிலிடப்படுவதுதான்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |