யாழில். குப்பைக்கு வைத்த தீயால் நேர்ந்த விபரீதம்!
Sri Lankan Tamils
Jaffna
By Theepan
யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால், வீடொன்று பகுதியளவில் தீயில் எரிந்துள்ளது.
அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு , வெளியே சென்றுள்ளனர்.
கூரையில் பற்றிய தீ
குப்பையில் பற்றிய தீ அருகில் வீட்டின் கூரையில் பற்றியநிலையில் வீடு இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்துள்ளது.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்